Sunday, November 9, 2008

ஐ போனில் வழு





பிரபல கணினி வல்லுனரான Piergiorgio Zambrini என்பவர் ஆப்பிள் இன் ஐ போன் மற்றும் ஐ பொட்டிலே ஒரு விபரீதமான பாதுகாப்பு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அவரது கூற்றுப்படி இந்த வழுவானது ஐ போன் மற்றும் ஐ பொட்டினை செயலிழக்க வைக்ககூடியதாம்.

இவரது கண்டுபிடிப்பின்படி இந்த வழு , ஆப்பிள் இன் வீடியோ போர்மட்டின் ஆடியோ பகுதியில் உள்ளது. ஒரு கொந்தர் (hacker) நினைத்தால் ஒரு சிறிய செயல் நிரலை எழுதி ஒரு வீடியோ கோப்பினில் இந்த வழுவுடன்இணைத்துவிட்டால் எப்போது அந்த கோப்பினை திறக்கும் போதும் ஐ போன் செயலிழந்து விடும் என்று எச்சரிக்கிறார் .

இந்த வழுவானது ஆப்பிள் ஒபெறேடிங் சிஸ்டத்தினால் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு shared code library இல் உள்ளது . இந்த வழுவானது கருவிக்கு எந்தவிதமான நிரந்தர சேதத்தையும் தராத போதிலும் கருவியை செயலிழக்க செய்து பின்னர் ரீபூட் பண்ண வைக்கும் .

Forbes.com இற்கு வழங்கியிருக்கும் ஒரு செவ்வியிலே தாம் இத்தனை ஜூலை மாதமளவிலேயே கண்டு பிடித்துவிட்டதாகவும் அப்போது ஆப்பிள் ஐ எச்சரித்தும் அதனிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளார் .


Zambrini ஒரு இத்தாலிய கணினி வல்லுநர் Ziphone என்ற மென்பொருளை உருவாக்கியதற்காக பலராலும் அறியப்பட்டவர் . இம்மென்பொருளானது ஐ போன் ஐ AT&T அல்லாத வேறு வலை அமைப்புக்களிலும் பாவிக்ககூடியவாறு மாட்டும் வல்லமை படைத்தது அதுமட்டுமல்லாது ஆப்பிள் இனால் அங்கீகரிக்கப்படாத மென்பொருட்களை பாவிக்கவும் உதவும் மென்பொருளாகும் .

இதற்கு முதலும் பல பாதுகாப்பு ஓட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . கடந்த மாதம் இஸ்ரேல் ஐ சேர்ந்த Aviv Raff என்பவர் புதிதாக வெளியிடப்பட்ட 3G ஐ போன் இல் இரண்டு துளைகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
முதலாவது ஐ போன் மெயில் இல் URL ஐ வெளிப்படுத்துவதிலுள்ள குறை . இதனால் ஒரு கொந்தர் இனால் ஒரு Malicious URL இணை பாதுகாப்பான URL போல அனுப்பமுடியும் .

மற்றையது ஐ போன் இனுடைய மின்னஞ்சல் மென்பொருள், இது எரிதங்களை அனுப்புபவர்களுக்கு எது உண்மையான மின்னஞ்சல் முகவரி என்று கண்டுபிடிக்க கூடியதாக இருக்கிறது .

அண்மையில் ஐரோப்பாவின் குளிரான காலநிலை காரணமாக இ போன் இன் touch screen இன் உணர்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல தொல்லைகளை அது கொடுப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

ஆக ஐ பாட் தந்த வெற்றியை ஐ போன் கொடுக்குமா என்பதுதான் கேள்விக்குறி .

6 comments:

சதங்கா (Sathanga) said...

ஆத்திச்சூடியை நினைவு கூரும் தலைப்பிற்காவவே உள்ளே வந்தேன். தகவலுக்கு நன்றிகள்.

Paheerathan said...

வருகைக்கு நன்றி சதங்கா ......என்னையறியாமலே அப்படியொரு தலைப்பு அமைந்து விட்டது

ஆட்காட்டி said...

அப்ப வாங்கத் தேவையில்லையா?

Paheerathan said...

வருகைக்கு நன்றி ஆட்காட்டி ,

இவ்வளவும் பார்த்த பிறகும் நான் வாங்கத்தான் போறேன் எண்டு நீங்க அடம்பிடிச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது :))

ஆட்காட்டி said...

இல்லை. எங்கட நிறுவனம் தான் இங்க குடுக்குது. இஞ்சத்தய காசு 50 குடுத்தா வாங்கலாம்.மாசமாசம் பில்லும் குடுத்திருவாங்கள். இப்ப என்ன செய்யலாம்? சொல்லுங்கோ!

Paheerathan said...

ஓஹோ .......அப்படியா அப்படியெண்டால் கூட்டிக்கழிச்சு பாத்தா உங்களுக்குத்தான் லாபம் வரும்போல இருக்குதே ......வாங்கிடுங்க . இப்பிடித்தான் ஆரம்பத்தில கொஞ்சம் ஆட்டம் காணத்தான் செய்யும் அப்புறம் எல்லாம் சரியாயிடும் . நான் என்ன பாவிச்சுப்பார்த்து அனுபவத்திலையா சொல்லுறேன் எல்லாம் மற்றவங்க சொல்லுறதுதானே . அதனுடைய ஸ்டையில் மற்றும் இதர விசயங்களையும் பார்க்கும்போது இதெல்லாம் பெரிசா எடுக்க தேவையில்லை நினைக்கிறேன்.